×

ஆடல் பாடல் நிகழ்ச்சியில் தகராறு 3 பேர் காயம்: 4 பேர் மீது வழக்கு

புவனகிரி, மே 7: புதுச்சத்திரம் அருகே உள்ள அய்யம்பேட்டை புயல் பாதுகாப்பு மையம் அருகே ஆடல் பாடல் நிகழ்ச்சி தொடர்பாக அன்னப்பன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த காமேஷ் (28) என்பவரிடம் பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த தீர்திஷ், அருண், ரேகன், சுரேஷ் ஆகியோர் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் 4 பேரும் சேர்ந்து காமேஷை தாக்கி உள்ளனர். அப்போது அதை தடுக்க வந்த அவரது நண்பர்கள் நித்திஷ் மற்றும் தீபன் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்த 3 பேரும் மருத்துவ சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் குறித்து காமேஷ் புதுச்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆடல் பாடல் நிகழ்ச்சியில் தகராறு 3 பேர் காயம்: 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Bhubaneswar ,Thirtish ,Arun ,Regan ,Suresh ,Periyakuppam ,Kamesh ,Annapanpettai ,Ayyampettai Storm Protection Center ,Puduchattaram ,
× RELATED மகள் மாயம்: தந்தை புகார்